மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் மாதிரிக் கிராமங்கள் செயல்திட்டத்தின் கீழ் இந்திய நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட காந்தி நகர் - மாதிரிக் கிராமம் இன்றைய தினம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டதுடன் பூர்த்தி செய்யப்பட்ட வீடுகள் பயனாளிகளுக்கு கையளித்து வைக்கப்பட்டன.
இந்திய நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு வரும் 100 மாதிரிக் கிராமங்களுள் இது இரண்டாவதாகும் என்பதோடு மிகவும் மதிக்கபடும் உலக தலைவரும், இந்திய தேச பிதாவுமான மகாத்மா காந்தியின் 150 ஆவது ஜனன ஞாபகார்த்த வருடத்தில், அவரது பெயரில் இக்கிராமம் ஸ்தாபிக்கப்பட்டது.
இந்திய உயர் ஸ்தானிகர் தரண்ஜித் சிங் சந்து மற்றும் வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் கௌரவ சஜித் பிரேமதாச ஆகியோர் கூட்டாக கிராமத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்ததுடன் வீடுகளையும் கையளித்து வைத்தனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.