இலங்கை வங்கியின் 80வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவில் அமைந்துள்ள இலங்கை வங்கிக் கிளையில் மரக்கன்றுகள் வழங்கிவைத்து கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
வங்கி முகாமையாளர் தா.பிரியதர்ஷன் தலைமையில் வியாழக்கிழமை 01ம் திகதி நடைபெற்ற இந் நிகழ்வில் மண்முனை மேற்கு பிரதேச சபை தவிசாளர் எஸ். சண்முகராஜா, வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி. நிசாந்த அப்புகாமி, மண்முனை மேற்கு பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ரி. நிர்மலராஜ் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட வங்கி உத்தியோகத்தர்கள், வாடிக்கையாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இலங்கை வங்கியின் 80 வது ஆண்டு நிறைவினை சிறப்பிக்குமுகமாக நாவற்காடு பிரதேச வாடிக்கையாளர்களுக்குஎ 80 பழமரக் கன்றுகளும், கன்னங்குடா பிரதேச வாடிக்கையாளர்களுக்கு 80 பழமரக் கன்றுகளும் வழங்கிவைக்கப்பட்டது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.