( வவுணதீவு நிருபர்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்திலுள்ள உன்னிச்சை - நெடியமடு கிராமங்களில் ஞாயிற்றுக் கிழமை (28ம் திகதி) அதிகாலை காட்டுயானைகள் உட்புகுந்து அங்கிருந்த விவசாயிகள் மூவரின் பயிர்களையும் தென்னைமரங்களையும் அழித்துவிட்டு சென்றுள்ளது.
இதேபோன்று, கடந்த சனிக்கிழமை அதிகாலையில் இப் பிரசேத்தில் மற்றுமொறு தென்னந் தோப்பினை காட்டு யானைகள் அழித்த சம்பவமும் இடம்பெற்றது.
இதேபோன்று, கடந்த சனிக்கிழமை அதிகாலையில் இப் பிரசேத்தில் மற்றுமொறு தென்னந் தோப்பினை காட்டு யானைகள் அழித்த சம்பவமும் இடம்பெற்றது.
இக் கிராமத்தில் அமைந்துள்ள குறித்த விவசாயிகளின் தோட்டத்தினுள் அதிகாலை 2 மணியளவில் சில காட்டுயானைகள் ஊடுருவி அங்குள்ள பயிர்வகைகளையும் தொன்னை மரங்களையும் அழித்து துவசம் செய்துள்ளது.
இக் கிராம மக்கள் அன்றாடம் காட்டு யானைகளின் தொல்லையால் தமது பிள்ளைகளுடன் இரவில் தூக்கமின்றி உயிருக்கு பயந்து அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
இப் பிரதேசத்தில் யானை பாதுகாப்பு வேலியில் மின்சாரம் இல்லாமல் உடைந்து சேதமடைந்துள்ள காரணத்தால் காட்டுயானைகள் தங்கு தடையின்றி தமது தோட்டத்திற்குள் இறங்கி தென்னைமரங்கள், வாழைமரங்கள், மற்றும் தோட்டங்களையும் அழித்துவிட்டுச் செல்வதாகவும் இதனை பொறுப்புமிக்க அதிகாரிகள் யாரும் பொருட்படுத்தாமல் பாராமுகமாக இருப்பதாகவும் இவ் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
கிராமங்களின் அருகிலுள்ள காடுகளில்தான் குறித்த காட்டுயானைகள் தற்போது தங்கியிருப்பதாகவும், அதனை தூர இடங்களிலுள்ள பெரிய காடுகளுக்கு துரத்திவிடும்படி இவர்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிநிற்கின்றனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.