மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மங்கிகட்டு கிராமத்தில் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் ஏற்பாட்டில் போதைப் பொருட் பாவனை தடுப்பு தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்வு செவ்வாய்கிழமை (4) பிற்பகல் மங்கிகட்டு கிராமத்தில் நடைபெற்றது.
சர்வதேச புகைத்தல் மது பாவனை எதிர்ப்பு தினத்தையொட்டி மங்கிகட்டு கிராமத்திலுள்ள நான்கு சமுர்த்தி சமுதாய அமைப்புக்கள் இணைந்து இச் செயற்பாட்டினை முன்னெடுத்தனர்.
இதன்போது, புகைத்தல், மது பாவனையால் மனிதர்களுக்கும் சமுதாயத்திற்கும் ஏற்படும் பாதிப்புக்கள் பற்றி தெழிவுபடுத்தும் வகையில் பிரதான வீதி மற்றும் கிராம வீதிகள் ஊடாக ஊர்வலமாக சென்றனர்.
இன் நிகழ்வில் சமுர்த்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மாதர் அபிவிருத்தி சங்கத்தினர் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.