
மன்னார், பேசாலை உதயபுரம் பகுதியில் தனது உடைமையில் விற்பனைக்காக வைத்திருந்த ஒரு தொகுதி கேரளா கஞ்சா பொதிகளுடன் இளைஞர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞரிடம் இருந்து 22 கிலோ 100 கிராம் நிறையுடைய கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
மன்னார், பேசாலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் விரைந்து உதயபுரம் பகுதிக்குச் சென்றனர். அங்குள்ள வீடொன்றை சோதனையிட்ட போது இளைஞர் ஒருவர் தனது உடைமையில் பதுக்கி வைத்திருந்த கேரளா கஞ்சா பொதிகளை கைப்பற்றியதுடன் இளைஞனையும் கைது செய்தனர்.
கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சா சுமார் 22 இலட்சம் ரூபாய் பெறுமதியானவை என தெரிய வருகின்றது.
கைப்பற்றப்பட்ட கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இளைஞனை மன்னார் பேசாலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதோடு, மேலதிக விசாரணை இடம்பெற்று வருகின்றது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.