மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் டெங்கு விழிப்புணர்வு குழு உருவாக்கல் தொடர்பான செயற் திட்டம் இன்று வௌ்ளிக்கிழமை மண்முனை மேற்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
உதவி பிரதேச செயலாளர் திருமதி சுபா சதாகரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் இப் பிரதேசத்திலுள்ள இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டனர்.
அம்கோர் நிறுவனம் செயற்படுத்தும் இச் செயற் திட்டத்தில் டெங்கு கட்டுப்பாடு, சுகாதார பாதுகாப்பு தொடர்பாக மண்முனை மேற்கு பிரதேச பொது சுகாதார மேற்பார்வை அதிகாரி வீ.விஜயகுமார் கலந்துகொண்டு வருகைதந்தோருக்கு விளக்கமளித்தார்.
பிரதேச மட்டத்திலும், கிராமமட்டத்திலும் டெங்கு விழிப்பூட்டல் குழுக்கள் அமைக்கப்படுதல் தொடர்பிலும் இச் செயற்பாடுகளுக்கு அம்கோர் நிறுவனம் போதிய ஒத்துழைப்புக்களை ஆலோசனைகளையும் வழங்கும் என இதன்போது அம்கோர் உத்தியோகத்தர்களால் தெரிவிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் மண்முனை மேற்கு பிரதேச அனர்த்தஉத்தியோகத்தர் என்.சிவநிதி மற்றும் அம்கோர் நிறுவன உத்தியோகத்தர்கள், கிராம இளைஞர் யுவதிகள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.