மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்திலுள்ள கொத்தியாபுலை கிராமத்தில் பின்தங்கிய கிராம அபிவிருத்தி வேலைத் திட்டத்தின்கீழ் கிராம அபிவிருத்தி திட்டங்களை தெரிவு செய்யும் நிகழ்வு செவ்வாய்கிழமை 28ஆம் திகதி இடம்பெற்றது .
கிழக்கு மாகாணசபை ஊடாக பின்தங்கியதும் தனித்துவிடப்பட்டதுமான கிரம அபிவிருத்தி திட்டத்திற்கென 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இந்நிகழ்வில் கலந்துகொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.
அவர் இங்கு மேலும் உரையாற்றுகையில், ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வைத்த கோரிக்கைக்கு அமைவாக கிழக்கு மாகாண கிராம அபிவிருத்திக்காக 300 மில்லியன் நிதி வழங்கப்பட்டுள்ளது. இதில் ஒரு மாவட்டத்திற்கு 100 மில்லியன் ரூபா வீதம் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட நிதியில் செங்கலடி,கிரான், வவுணதீவு, வாழைச்சேனை, கோறளைப்பற்று மத்தி, வெல்லாவெளி, ஏறாவூர் நகர் மற்றும் ஆரையம்பதி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின்கீழ் வவுணதீவு பிரதேசத்தில் இந்த கொத்தியாபுலை, ஆயித்தியமலை கிராமங்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளரும் பிரதேச சபை உறுப்பினருமான மயில்வாகனம் சிறிதரன் இந் நிதி கொத்தியாபுலை கிராமத்திற்கு பெற்றுக்ெகாடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளரும் பிரதேச சபை உறுப்பினருமான மயில்வாகனம் சிறிதரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், கிழக்கு மாகாண முதலமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் மோகன் பிறேம்குமார், மண்முனை மேற்கு பிரதேச கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.அரசகுமார், கிராம உத்தியோகத்தர் குருபரன் மற்றும் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.