மட்டக்களப்பு - கூழாவடிப் பகுதியில் புதன்கிழமை அதிகாலை 05.12.2018 புகையிரதத்தில் மோதுண்ட ஆணொருவரின் சடலம் அங்கங்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு - மட்டக்களப்பு இரவு நேர புகையிரதம் அதிகாலை 4 மணியளவில் மட்டக்களப்பு நகர புகையிரத நிலையத்தை நெருங்கும்போது கூழாவடி எனுமிடத்தில் இந்த நபர் மோதுண்டுள்ளார்.
தலை, கால் துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட உருக்குலைந்த சடலத்தினருகே டோர்ச் லைற் ஒன்றும் கிடந்ததாக சடலத்தை மீட்ட உதவியாளர்கள் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் கூழாவடியைச் சேர்ந்த முருகன் ஆறுமுகம் (78 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் உடற்கூறாய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம்பற்றி மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
Post Top Ad
Wednesday, December 5, 2018
Home
Batticaloa
Sri lanka
மட்டக்களப்பில் புகையிரதத்தில் மோதுண்ட ஆணொருவரின் சடலம் அங்கங்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்பு
மட்டக்களப்பில் புகையிரதத்தில் மோதுண்ட ஆணொருவரின் சடலம் அங்கங்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்பு
Tags
Batticaloa#
Sri lanka#
Share This
About vettimurasu
Sri lanka
Tags:
Batticaloa,
Sri lanka
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.