
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், ஊடகப் பேச்சாளருமான எம்.எ.சுமந்திரன் அவர்களுக்கும், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு பிரதிநிதிகளுக்கும் இடையிலான சிநேகபூர்வ விசேட கலந்துரையாடல் ஒன்று அண்மையில் இடம்பெற்றது.
இதன் போது மாவட்ட ரீதியிலும், கட்சி ரீதியிலுமான பல்வேறு விசேட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட இணைப்பாளர் தெரிவித்தார்.
அண்மையில் மட்டக்களப்பில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் நினைவு நாள் நிகழ்வில் அதிதியாகக் கலந்து கொண்டதன் பின்னர் இச்சந்திப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.