மேன்முறையீட்டு இடமாற்ற சபை அமர்வு கடந்த 26ஆம் திகதி நடைபெறவிருந்த போதிலும் சில வலயங்களிலிருந்து மேன்முறையீட்டு இடமாற்ற பட்டியல் வந்துசேராத காரணத்தினால் 30ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களைப் போன்று இல்லாது இம்முறை மாகாண மட்ட மேன்முறையீடுகளை அந்தந்த வலயத்திலும் இடம்பெற்று அவர்களது கருத்துகளும் பெறப்பட்டுள்ளன.
கிழக்கில் இவ்வருடம் இடமாற்றப்படவுள்ள இரண்டாம் தொகுதி 447 ஆசிரியர்களுள் 99 வீதமானோர் தமக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை மீளாய்வு செய்யுமாறு கோரி மேன்முறையீடு செய்துள்ளனர்.
இது கவலைக்குரியது. அனைத்து ஆசிரியர்களும் தமக்கு சுகவீனம், தூரம் என்றுகூறி காரணம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் கிழக்கு கல்வி அபிவிருத்தியை எவ்வாறு முன்னெடுப்பது?
பின்தங்கிய கல்குடா, மட்டு. மேற்கு வலய மாணவர்களுக்குக் கற்பிப்பது யார்? அவர்களுக்கு கல்விகற்கும் உரிமையில்லையா? மேன்முறையீடு செய்த பலர் திருமலைக்கு வந்து முறையிடுகின்றனர்.
அப்படி இங்கு வந்துதான் முறையிட வேண்டுமென்பதில்லை. அப்பீல் சபை யூடாக நேர்மையாக நீதியாக மாணவர் கல்வி பாதிக்கப்படாவண்ணம் அதேவேளை ஆசிரியர் நலன்கருதி இடமாற்றம் இடம்பெறும்.
ஆளுநரின் அறிவுறுத்தலுக்கமைவாக இவ்வருடம் 760 ஆசிரியர்கள் இடமாற்றத்துக்குள்ளாகின்றனர். இவர்களுள் 313 பேர் சேவைக்காலத்தை பூர்த்தி செய்து சுயவிருப்பத்தின் பேரில் விண்ணப்பித்து இடமாற்றம் பெறுபவர்கள்.
மிகுதியான 447 ஆசிரியர்கள் கஸ்ட, அதிகஸ்ட பிரதேச கடமையாற்றாதவர்கள் அல்லது ஏற்கனவே அக்காலத்தை முற்றாக பூர்த்தி செய்யாதவர்களாவர். இந்த 447 பேரில் 99 வீதமானோர் மேன்முறையீடு செய்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.