இதன்போது 100 இற்கு மேற்பட்ட மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களை சேர்ந்த மாவீரர்களின் திருவுருவப்படங்கள் அவர்களின் பெற்றோரிடம் கையளிக்கப்பட்டன.
இதன் போது கருத்து தெரிவித்த ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர்,
நினைவேந்தல்கள், கௌரவிப்புக்கள் என்கின்ற நிலைகளையும் தாண்டி மாவீரர் பெற்றோர் உரித்துடையோர்களின் அன்றாட வாழ்வியல் தேவைகள் குறித்து மிகவும் கரிசனையுடனும், பொறுப்புடனும் செயலாற்ற வேண்டிய தேவை போராளிகளிடமும் தேசியத்தை நேசிக்கின்ற அத்தனை தமிழ் சந்ததிகளிடமுமே காலம் கையளித்துள்ளதென்பதை அன்புரிமையுடன் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.