வீதி விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த குடும்பஸ்தர் சிகிச்சை பயனின்றி மரணமடைந்துவிட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலை சந்திவெளி எனுமிடத்தில் ஞாயிற்றுக்கிழமை 14.10.2018 இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் கதிராமன் மகேஸ்வரன் (வயது 52) எனும் 4 பிள்ளைகளின் தந்தையே பலியாகியுள்ளார்.
இவர் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது தனியார் பஸ் ஒன்றினால் மோதுப்பட்டு படுகாயமடைந்துள்ளார்.
உடனடியாக சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட சமயம் சிகிச்சை பயனின்றி திங்கட்கிழமை 15.10.2018 மரணமடைந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
விபத்தை ஏற்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் தனியார் பஸ்ஸை பொலிஸார் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.
Post Top Ad
Monday, October 15, 2018
விபத்தில் சிக்கிய குடும்பஸ்தர் சிகிச்சை பயனின்றிப் பலி
Tags
Batticaloa#
Sri lanka#
Share This
About vettimurasu
Sri lanka
Tags:
Batticaloa,
Sri lanka
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.