தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், தேவை ஏற்பட்டால் எதிர்க்கட்சி தலைவர் பதவியை கைவிட தயார் என தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
சிங்கள ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு, கட்சியின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இந்தத் தகவலை வெளியிட்டார்.
நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் பதவியில் தற்போது வரையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன் செயற்பட்டு வருகின்றார்.
நாடாளுமன்றில் 16 உறுப்பினர்களை கொண்ட மூன்றாவது பெரும் கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளது.
இந்நிலையில் தற்போதைய நிலையில் அரசியல் மட்டத்தில் பல மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறான சூழ்நிலையில் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தினை தமிழ் தேசிய கூட்டமைப்பு இழக்கக் கூடிய சூழ்நிலைகளும் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Post Top Ad
Wednesday, October 31, 2018
எதிர்க்கட்சி தலைவர் பதவியை கைவிட தயார்! தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவிப்பு
Tags
Sri lanka#
Share This
About vettimurasu
Sri lanka
Tags:
Sri lanka
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.