சிலாபம் பகுதியில், பெருந்தோட்டக் கம்பனிக்கு சொந்தமான, பலுகஸ்வெவ தோட்டத்தைச் சேர்ந்த, 15 வயதுடைய சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம், நேற்று இரவு (28), இடம்பெற்றுள்ளதென, ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுவன், தனது குடியிருப்புத் தொகுதிக்குப் பின்னால் நீராடச் சென்றுள்ளார். இதன்போது, பாதுகாப்பற்றமுறையில் பொருத்தப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கி உயிரிழந்துள்ளாரென பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த சிறுவனின் சடலம், பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post Top Ad
Monday, October 29, 2018
மின்சாரம் தாக்கி சிறுவன் பலி
Tags
Sri lanka#
Share This
About vettimurasu
Sri lanka
Tags:
Sri lanka
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.