ரணவிரு சேவா அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட நிகழ்ச்சித் திட்ட அலுவலர் ரீ.எச். கீதிகா ஜயவர்தன தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் எம். உதயகுமார், ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் என். வில்வரெட்ணம், மங்களகம பொலிஸ் பொறுப்பதிகாரி எச்.எம்.எஸ். திஸாநாயக்க உட்பட பௌத்த பிக்குகள், முப்படை அதிகாரிகள், பயனாளிகள், மக்கள் பிரதிநிதிகள், கிராம மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக 2 இலட்ச ரூபாய் நன்னொடையாகவும் 3 இலட்ச ரூபாய் மானிய அடிப்படையிலான கடனாகவும் மொத்தம் 5 இலட்ச ரூபாய் பெறுமதியான இவ்வீடுகள் 3 மாத காலத்திற்குள் நிர்மாணிக்கப்பட்டு கிராமம் மக்களிடம் கையளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.