மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தின் உன்னிச்சை 6 ஆம் கட்டை அரச தமிழ் கலவன் பாடசாலை மாணவன் செல்வன் ஜெ.துகிந்தரேஷ் தற்போது இணையத்தளத்தில் வௌியாகிய ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின்படி, 196 புள்ளிகளைப் பெற்று மாவட்ட , மகாண மட்டத்தில் முதலிடத்தினையும் தேசிய ரீதியாக நான்காம் இடத்தினையும் பெற்று தனக்கும் பாடசலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட கட்டமைப்பு வசதிகள் குறைந்த கிராமமான உன்னிச்சையில் இருந்து இம் மாணவன் சாதித்துள்ளமையானது மிகவும் பாராட்டுதலுக்கும் பெருமைப்படத்தக்கதுமான விடயமாகும்.
மாணவனை மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர், பிரதி வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோர் நேரில் சென்று வாழ்த்தியுள்ளதுடன், பாடசாலை அதிபர் பேரானந்தம் மற்றும் கற்பித்த ஆசிரியர்களுக்கும் தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.