
கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் வருடாந்த இடமாற்றம் பெற்றுச்சென்ற உத்தியோகத்தர்களுக்கான பிரிவுபசார விழா நேற்று முன்தினம் பிற்பகல்; செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது .
உதவிப் பிரதேச செயலாளர்; திருமதி.நிருபா பிருந்தன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கணக்காளர் திருமதி.டிலானி ரேவதன், வருடாந்த இடமாற்றம் பெற்றுச்சென்ற உத்தியோகத்தர்கள், செயலக உத்தியோகத்தர்கள், கிராமசேவகர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
கோறளைப்பற்று பிரதேச செயலகத்தின் வளர்ச்சிக்காகப் அயராது பாடுபட்ட ஒவ்வொரு உத்தியோகத்தரையும் உதவிப் பிரதேச செயலாளர் பாராட்டி கௌரவித்ததும்; குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.