காத்தான்குடி மீடியா போரத்தின் ஏற்பாட்டில், காத்தான்குடி பிரதேச செயலகத்துக்கு முன்பாக, இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
“ஊடக அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம்”, “ஊடகவியலாளர் சஜீ மீதான கொலை அச்சுறுத்தலை வன்மையாகக் கண்டிக்கின்றோம்”, “போதைவஸ்தை ஒழிக்க அனைவரும் ஒன்றுபடுவோம்” போன்ற பாதாதைகளை ஏந்தி, அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது, ஊடக சுதந்திரத்திரத்தை வலியுறுத்தும் வகையிலான கோஷங்கள் எழுப்பப்பட்டதுடன், போதைப்பொருளுக்கு எதிரான கோஷங்களும் எழுப்பப்பட்டன.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.