இவ்வாறு ஆற்றில் காணமல்போனதாக தெரிவிக்கப்பட்ட மூதாட்டியின் சடலத்தின் ஒரு பகுதியே இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
பொன்னன் மாரியாய் என்ற 70 வயது மூதாட்டியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
நேற்று மாலை வீட்டில் மதிய உணவிற்கான சமையல் பணிகளை முடித்து விட்டு அருகில் உள்ள நீரோடையில் குளிப்பதற்காகச் சென்றவர் மாலை நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
எனினும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர். நீரோடையில் முதலைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதனால் முதலை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்திருக்கலாம் என நீரோடையில் தேடும் பணியினை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது அவர் குளிப்பதற்காக அணிந்திருந்த சேலையினை உறவினர்கள் மீட்டுள்ளதோடு அது கிழிந்த நிலையில் காணப்பட்டுளளது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.