மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவின் மாங்காடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 08.07.2018 இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் சாரதியொருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு – கல்முனை வீதி மாங்காடு பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த விபத்தில் பட்டாரக வாகனத்தைச் செலுத்திச் சென்ற காத்தான்குடியைச் சேர்ந்த முஹம்மத் லாபீர் (வயது 38) என்பவர் படுகாயமடைந்த நிலையில் உடனடியாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கபப்டார்.
வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் பட்டா வாகனம் வீதி மருங்கிலிருந்த அதி அழுத்த மின்னைத் தாங்கிச் செல்லும் கம்பத்தில் போய் மோதுண்டுள்ளது.
இதனால் வாகனத்திற்கும் சேதமேற்பட்டுள்ளதோடு மின்கம்பம் மற்றும் வயர்களும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளன.
இச்சம்பவம்பற்றி களுவாஞ:சிக்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
Post Top Ad
Sunday, July 8, 2018
மின் கம்பத்துடன் மோதுண்டு பட்டர ரக வாகனம் விபத்து சாரதி படுகாயம்
Tags
Batticaloa#
Sri lanka#
Share This
About vettimurasu
Sri lanka
Tags:
Batticaloa,
Sri lanka
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.