
குறித்த சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதுடன் சந்தேகத்தின் அடிப்படையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவமானது சுளிபுரம் காட்டுபுலம் பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன் சிவநேஸ்வரன் றெஜீனா என்ற 06 வயது சிறுமியே சடலமாக மீட்கப்பட்டவராவர்.
வீட்டிற்கு சற்று தொலைவில் உள்ள தோட்ட கிணறு ஒன்றிக்குள் உள்ளாடை மாத்திரம் காணப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவரது உடலில் கழுத்தானது நெரிக்கப்பட்ட நிலையிலும், நெற்றி பகுதியில் காயங்கள் காணப்படுவதாக பொரிஸார் தெரிவித்தனர்.
மேலும் குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் என ஊர் மக்களால் அடையாளப்படுத்தப்பட்ட நான்கு பேரை வட்டுக்கோட்டை பொலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து சென்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.