தமிழர்களின் நேரம் அனைத்தும் உழைப்பை நோக்கியதாக இருக்கும். சிந்திக்க நேரம் இருக்காது என திட்டமிடப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
2009ஆம் ஆண்டுக்கு முன்னர் யுத்தம் இடம்பெற்றபோதும், தமிழர்கள் தங்களது அடிப்படை பொருளாதார இருப்பை அடையவிடவில்லை.
கடந்த 30 ஆண்டுகளாக யுத்த செலவோடு, சுயசார்பு பொருளாதாரத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டு, தமிழர்களின் நிதிப் பொருளாதார நிலை ஓரளவு ஸ்திரத் தன்மையிலேயே இருந்தது.
எனினும், 2009ஆம் ஆண்டின் பின்னர், நுண்நிதி நிறுவனங்கள் மற்றும் பிரமிட் வியாபாரம் என்பனவற்றின் ஊடாக வடக்கு, கிழக்கு மக்களின் அடிப்படை பொருளாதாரப் பொறிமுறை அழிக்கப்பட்டு விட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற நுண்நிதி நிறுவனங்கள் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Post Top Ad
Friday, June 8, 2018
வடக்கு, கிழக்கு மக்களின் அடிப்படை பொருளாதாரப் பொறிமுறை அழிக்கப்பட்டு விட்டது
Tags
Sri lanka#
Share This
About vettimurasu
Sri lanka
Tags:
Sri lanka
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.