ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மேதினக் கூட்டம் மட்டக்களப்பு, மாவடிவேம்பில் இன்று திங்கட்கிழமை 7ஆம் திகதி மிக பிரமாண்டமாக நடைபெற்றது.
அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்துகொண்டு மேதின உரையினை நிகழ்த்தினார்.
இக் கூட்டத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சிரேஷ்ட உறுப்பினர்கள், அமைச்சர்கள், ஆளுனர்கள், பிரதியமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் வருகைதந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.