பெர்லினில் பொதுச்சேவைகளில் சமய ஆடைகளை அணிவதற்கு உள்ள தடையை நீக்கக் கோரி முஸ்லிம் பாலர் பாடசாலை ஆசிரியை ஒருவர் தொடுத்த வழக்கு நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த நகரத்தின் ஆசிரியர், பொலிஸார் மற்றும் நீதிமன்ற அதிகாரிகளுக்கான நடுநிலைச் சட்டம் சட்டபூர்வமானது என்று பெர்லின் தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார்.
பாடசாலைகளில் முஸ்லிம் பெண்கள் தலையை மறைக்கும் அபாய அணிவது குறித்து ஜெர்மனியின் 16 மாநிலங்களிலும் வெவ்வேறு சட்டங்கள் உள்ளன.
எனினும் அரச ஊழியர்கள் முகத்தை மறைப்பது தேசிய அளவில் தடை செய்யப்பட்டிருந்தபோதும் அபாயா ஆடைக்கு அவ்வாறான தடை இல்லை.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.