இந்நிகழ்வில் பிரதம வளவாளராக கிழக்கு பல்கலைக்கழக இரசாயனவியல் துறை தலைவர் கலாநிதி எம்.சிதம்பரேசன் கலந்து கொண்டு மாணவர்களுக்கும் மாணவர்களின் பெற்றோருக்கும் கற்றலுக்கான வழிகாட்டலும் ஆலோசனையும் வழங்கியதுடன் களுவாஞ்சிகுடி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய குருக்கள் சிவஸ்ஸ்ரீ அங்குச சர்மா இந்துமதப் பிரார்த்தனையையும் ஆசிர்வாதத்தினையும் வழங்கினார்.
இந்நிகழ்வுகளில் பிரதி அதிபர்களான என்.நாகேந்திரன், ரீ.ஜனேந்திரராஜா உயர்தர விஞ்ஞானப்பிரிவு பகுதித்தலைவர் எம்.ஜெயதி, பாடசாலை அபிவிருத்தி சபை செயலாளர் கே.லோகநாதன், பழைய மாணவர் சங்க பொருளாளர் எஸ்.உதயணன் ,உயர்தர தொழில்நுட்பவியல் துறை பகுதித்தலைவர் ரீ.ருத்ராஹரன் மற்றும் உயர்தர விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பவியல் துறை ஆசிரியர்களும், சிரேஸ்ட ஆசிரியர்களும் மாணவர்களும், மாணவர்களின் பெற்றோரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வினை பாடசாலை ஆசிரியர் ரீ.தெய்வீகன் நெறிப்படுத்தியதுடன் உயர்தர விஞ்ஞானத்துறை பௌதீகவியல் ஆசிரியர் கே.கோவண்ணன் நன்றியறிதலையும் மேற்கொண்டார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.