வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாகனேரி, புலிபாய்ந்தகல் ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிச்சென்ற இரண்டு சந்தேக நபர்களை நேற்றைய தினம் வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சட்டவிரோதமாக மணல் ஏற்ற பயன்படுத்திய இரண்டு உழவு இயந்திரங்களையும் இதன்போது பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் பொண்டுகள்சேனை, வாகனேரி, ஆத்துச்சேனை புலிபாய்ந்தகல் போன்ற பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றுவதாக பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சுற்றிவளைப்பின்போதே குறித்த சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.