
முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெ.ஜனாரத்தனன் தலமையில் நடந்த இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் விளையாட்டுத்துறை மற்றும் கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி, திருகோணமலை நகரமும் சூழலும் பிரதேசசபையின் தவிசாளர் டாக்கடர் ஜி.ஞானகுணாளன் உள்ளிட்ட பலரும் பல விளையாட்டுத்துறை சார்ந்தவர்களும் ஆர்வலர்களும் கலந்து கொண்டு வரவேற்று கௌரவித்தனர்.
இந்நிகழ்வில் இவரைபயிற்றுவித்த ச.விஜயநீதன், ஆசிரியர், தங்கநகர் ஆரம்ப பாடசாலை பயிற்றுவிப்பாளராக தினேஸ்குமார் ஆசிரியர் அப்பாடசாலையின் அதிபர் பா.கோணெஸ்வரராஜா உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு தமது அசிகளை வழங்கினர்.
இங்கு உரையாற்றிய முன்னாள் கல்வி அமைச்சர். சாதனைபடைத்தவர்கள் எல்லாம் சகல வளங்களையும் வைத்துக்கொண்டு சாதனைகளைச்செய்வதில்லை. அந்த வகையில் உதயராணியும் மிகவும் வறிய பின்தங்கிய பகுதியில் பிறந்து இன்று பல சிரமங்களுக்கு மத்தியில் எமது நாட்டிற்கும் எமது கிழக்கு மாகாணத்திற்கும் பெருமைசேர்த்துள்ளார். இவரது எதிர்கால வளர்சிக்கு மேலம் பலரும் உதவுவார்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு எனவும் குறிப்பிட்டார்.
இவர் திருகோணமலை மாவட்டத்தின் தென்பகுதியான கிளிவெட்டிக்கு அடுத்தால்போல் அமைந்துள்ள தங்க நகர் கிராமத்தைச்சார்ந்தவராவார். இவரது தந்தையார் நாகேந்திரம் அவர்கள் ஒரு விவசாயி என்பதுடன் மிகவும் வறிய குடும்பத்தைச்சார்ந்தவர்கள் ஆகும் தயார் நாகேந்திரம் ஞானமணியாகும் தற்சமயம் இவர் பட்டித்திடல் வித்தியாலயத்தில் க.பொ.த உயர்தரம் கற்கும் மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.