யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் உத்தரவின்படி நீதிமன்றத்துக்கு முன்பாகவுள்ள அரச காணியில் சான்றுப் பொருள்கள் தீயிடப்பட்டன.யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் முடிவடைந்த வழக்குகளின் சான்றுப் பொருள்களான 275 கிலோ கஞ்சா உட்பட சான்றுப் பொருள்கள் நேற்று (17.05.2018) தீயிட்டு எரித்து அழிக்கப்பட்டன.
2016ஆம் ஆண்டு முடிவடைந்த போதைப் பொருள் கடத்தல், கொலை, கொள்ளை, வன்கொடுமை உட்பட 15 வழங்குகளின் சான்றுப் பொருள்கள் தீயிட்டு அழிக்கப்பட்டன.யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றி நீதிபதி மா.இளஞ்செழியனின் உத்தரவின்படி நீதிமன்றத்துக்கு முன்பாகவுள்ள அரச காணியில் சான்றுப் பொருள்கள் தீயிடப்பட்டன.
தீயிட்டு எரிக்கப்பட்ட கஞ்சா 25 லட்சம் ரூபா பெறுமதியானது என்று கூறப்படுகின்றது.கடந்த நவம்பர் மாதமும் முடிவடைந்த வழக்குகளின் சான்றுப் பொருள்கள் எரிந்து அழிக்கப்பட்டன. சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான கஞ்சா அதன்போது எரித்து அழிக்கப்பட்டது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.