மட்டக்களப்பு தாழங்குடா பிரதேசத்தில் வேடர்குடியிருப்பு பகுதியில் சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
சகாயநாதன் விதுசனா (வயது 17) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தனது நண்பர்களுக்கு தொலைபேசியில் குறுந் தகவல்களை அனுப்பி விட்டு இவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் உறவினர்களால் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மாணவி காதல் விவகாரம் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பிரதேச மக்களால் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.